சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்திற்காக சமுர்த்தி கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி 2025/05/23 அன்று நடைபெற்றது.




சிறுவர்களின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிரதேச மட்டத்தில் சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் செயற்பட்டு வருகின்ற கிராமிய சிறுவர் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 2025.05.21 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
நிகழ்வினை மதிப்பார்ந்த பிரதேச செயலாளர் அவர்கள் ஆரம்பித்து வைத்ததோடு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களினால் தொடர்ச்சியான விழிப்புணர்வு கருத்தமர்வானது முன்னெடுக்கப்பட்டது.
-
சிறுவர்களின் உரிமைகள் பற்றி அறிமுகம்
-
பாலியல் மற்றும் மனஉளைச்சல் துஷ்பிரயோகங்களின் அடையாளங்கள்
-
பாதுகாப்பு மேலாண்மை மற்றும் சமூகப் பொறுப்புகள்
-
பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோரின் பங்கு
-
சட்டங்களும் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளும்



🎓 இலவச பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டல் கருத்தரங்கு! 🎓
உங்கள் உயர்கல்வி பயணத்துக்கு வழிகாட்டும் சிறப்பான வாய்ப்பு!






















