2025.10.15
சிறுவர் பிரச்சினைகளுககு தீர்வினை வழங்கும் வேலைத்திட்டம்
பாடசாலை வரவு ஒழுங்கீனம், பாடசாலை இடை விலகல் மற்றும் பிறப்பு சான்றிதழ் இல்லாமை ஆகிய சிறுவர் பிரச்சினைகளுககு தீர்வினை வழங்கும் வகையிலான மூன்றாம் கட்ட வேலைத்திட்டமானது மதிப்பார்ந்த உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றிருந்தது. குறித்த சிறப்பு வேலைத்திட்டத்தில், வெளிக்கள கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தவகையில், முத்துவிநாயகபுரம், முத்தையன்கட்டு மற்றும் கனகரத்தினபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 40 பிள்ளைகள் குறித்த விசேட வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















