2026.03.23
பிரதேச மட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழு கூட்டம் 2026
2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான கூட்டமானது உதவி பிரதேச செயலாளர் தலமையில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் சிறுவர்களின் கல்வி மேம்பாடு, பாதுகாப்பு, சுகாதாரம், போசாக்கு, போக்குவரத்து, நல்வாழ்வு மற்றும் அறநெறி தொடர்பாக இருக்கக் கூடிய சவால்கள் மற்றும் இடைவெளிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தன.
தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு, அபிவிருத்தி, பிரச்சினைகள் மற்றும் சட்ட ரீதியற்ற போதைப்பொருள் பாவனை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் முக்கியமான தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருந்தன.
இக் கூட்டத்தில், ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறை அதிகாரி, வலயக்கல்வி உத்தியோகத்தர், பிரதேச சபை அதிகாரி. பாடசாலை அதிபர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் கிளையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















