2026.02.04
78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியிருந்தன. தொடர்ந்து இந் நன்நாளை நினைவுகூரும் வகையில், அலுவலக வளாகத்திலே மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து, டித்வா புயல் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவு, உடுபுடவை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















