2026.01.19
சூரிய பகவானுக்கு நன்றி கூறி புதிய அறுவடையைக் கொண்டாடும் தமிழர்களின் முக்கியமான அறுவடைத் திருநாளாகிய தைப்பொங்கல் நிகழ்வுகள் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களால் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டிருந்தன. அத்துடன் பொதுமக்களும் குறித்த பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு பொங்கல் உண்டு மகிழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



















