2026.01.10
பாடசாலை மத்தியஸ்த சபை உருவாக்கம் தொடர்பாக மாணவர்களுக்கான கருத்தரங்கு
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மத்தியஸ்த அலகின் ஏற்பாட்டில் மத்தியஸ்த சபை உருவாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக அதிபர் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான தெளிவூட்டும் பயிற்சிப்பட்ட றை மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கின் வளவாளராக மத்தியஸ்த சபையின் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் திரு. ச .லக்ஸ்மன் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. க. தினேஸ்குமார் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பாளராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜோ. சிவரஞ்சினி அவர்கள் கலந்து கொண்டார். இவர்கள் தமது விரிவுரையில் மத்தியஸ்த சபை தோற்றம், செயற்பாடு, பிணக்குகளை தீர்க்கும் பொறிமுறை என்பவற்றுடன் மத்தியஸ்த சபையின் உறுப்பினர் நியமனம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்தனர்.

















