2025.11.13
இலக்கிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது, பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் உதவி பிரதேச செயலாளர் அவர்களுடன் இணைந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களினையும் வழங்கிக் கௌரவித்திருந்தனர்.


















