2025.09.16
உள்ளூராட்சி வாரம் 2025
வளமான நாடும் அழகான வாழ்க்கையும் என்ற தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாள் 2025.09.16 அன்று சுற்றாடல் மற்றும் மரநடுகை தினமாக கொண்டாடப்பட்டிருந்தது. அன்றைய நாளின் சிறப்பு நிகழ்வாக ஒட்டுசுட்டான் நகரப் பகுதி மற்றும் பிரதேச செயலக பிரதான வீதியின் இரு மருங்குகளிலும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை, இராணுவம் , பொலிஸ் மற்றும் பொது மக்களின் பங்குபற்றலுடன் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதானப் பணிகளில் ஈடுபட்டதோடு மரநடுகை நிகழ்வினையும் சிறப்பான முறையில் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















