2025.10.16
சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்
பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் முத்தையன்கட்டு இடதுகரை அ.த.க.பாடசாலையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தன.
பாடசாலையின் முதல்வர் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததோடு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.
குறித்த சிறுவர் தின நிகழ்விற்கான அனைத்துவிதமான ஒழுங்குபடுத்தல்களையும் ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் மேற்கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரதேச செயலகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

















