2025.09.11

பொருளாதார ரீதியில் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கான க கற்றல் உபகரணங்கள் வழங்குதல்
மாணவர்களின் பாடசாலை வரவு ஒழுங்கீனம், இடைவிலகல் மற்றும் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமை ஆகிய பிரச்சினைகளை சீரமைக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டமானது பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் தலைமையில், பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்திப் பிரிவு மற்றும் வெளிக்களக் கிளை உத்தியோகத்தர்களால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதில் ஒரு அங்கமாக, பாடசாலை வரவு ஒழுங்கீனம் மற்றும் இடைவிலகல் நிலையிலுள்ள பிள்ளைகளில், பொருளாதார ரீதியான இடர்பாடுகளை எதிர்நோக்கும் பிள்ளைகளை இனங்கண்டு, அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் (11.09.2025) உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் ஒலுமடு தமிழ் வித்தியாலயத்திலும் குறித்த கற்றல் உபகரணங்கள் நன்கொடையாளர்களால் அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பெருமனதோடு குறித்த கற்றல் உபகரணங்களினை பெற்றுக் கொடுத்த நன்கொடையாளருக்கு இவ் வேளையில் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கின்றொம்.

No photo description available.No photo description available.

 

 

News & Events

10
ஆக2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
ஆக2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

குடியுரிமை சாசனம்

Scroll To Top