2026.06.09
பசுமை உலகை உருவாக்க பங்காளராவோம்
உலக சுற்றுச்சூழல் தினம் – 2026 ஐ முன்னிட்டு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பசுமை அலுவலக முன்முயற்சி நிகழ்வு உற்சாகமாக முன்னெடுக்கப்பட்டது. உத்தியோகத்தர்கள் அனைவரும் பசுமை அலுவலக உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, தங்களது கைரேகைகளை இலைகளாகப் பதித்து ஒரு பசுமை மரத்தை உருவாக்கினர். இந்த மரம் வெறும் கலைப் படைப்பு அல்ல; சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தவும், நிலையான எதிர்காலத்தை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்பதற்கான அடையாளமாகும். ஒவ்வொரு கைரேகையும் ஒரு உறுதி! ஒவ்வொரு செயலும் ஒரு பசுமையான நாளைக்கான முதலீடு!பசுமை அலுவலகத்தின் ஊடாக பசுமையான ஒரு உலகை உருவாக்க பங்காளராவோம்!

















