2026.03.17
தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம்" சமூக உற்பத்திதிறன் மாதிரி கிராம திட்டம்
கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் வித்தியாபுர கிராம அலுவலர் பிரிவில் 1/2 ஏக்கர் வித்தியாபுரம் கிராமத்தினை சமூக உற்பத்திதிறன் கிராமமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வானது இன்றையதினம் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ப.கனிஸ்ரன் ஓருங்கிணைப்பில் வித்தியாபுர கிராம மக்கள் மற்றும் கிராமமட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு இ.நிஷாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும் கரிதாஸ் நிறுவன இயக்குனரும் கலந்து கொண்டதோடு வித்தியாபுர கிராமத்தினுடைய சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு இத்திட்டம் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இறுதியாக உற்பத்தி திறன் மாதிரி கிராமத்தினுடைய பெயர்ப் பலகையினை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மற்றும் மக்கள் ஆகியோர் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்தனர்.
மேலும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராம மக்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டுக்களும் விழாவினை மேலும் சிறப்பிதத்தோடு கிராம மக்கள் ஒன்றிணைந்து பொது முன்னுதாரண வேலைத்திட்டமாக சிரமதானத்தினையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு சிறப்பாக அமைய அனைத்து வேலைகளிலும் ஆர்வமுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட வித்தியாபுரம் கிராமத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் ,எமது கிராமத்தின் இந்த புதிய பயணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்.





















